இந்தியாவுக்கு மற்றொரு தலைநகரம் தேவை என போராடுவோம்… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல்;

இந்தியாவுக்கு மற்றொரு தலைநகரம் தேவை என போராடுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆந்திர மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், பாரதிய அம்பேத்கர் சேனா அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் இம்மாநாட்டில் எழுச்சியுரையாற்றிய தொல்.திருமாவளவன், தற்போது நாட்டை ஆண்டுக் கொண்டிருப்பவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்துத்துவத்தை வேரறுப்போம் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்தால் தான் சமூக நீதியை பாதுகாக்க முடியும் என்றும், நமக்கான சுதந்திரத்தை பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.

இந்தியாவுக்கு மற்றொரு தலைநகரம் தேவை என போராடுவோம் என்று கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆந்திரா மாநிலத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *