ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிர்ழந்தனர்.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் குழு இயங்கி வருகின்றது. நைஜீரியா மட்டுமல்லாது அண்டை நாடுகளிலும் இந்த குழு பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்நிலையில், நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரி பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *