தமிழகத்தில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாடு போன்று ஆந்திர மாநிலம் நெல்லூரிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது.
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் மது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், மக்கள் விடுதலை பாடகர் கத்தர், எஸ்டிபிஐ கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் அப்துல் வாரீஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.