அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் திடிரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. இதைதொடர்ந்து வீசிய பலத்த காற்று காரணமாக அங்குள்ள நகர் பகுதிகளில் தீ வேகமாக பரவியது. இதையடுத்து வனப்பகுதிகளை ஒட்டி தங்கியிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த காட்டுத்தீயில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீ சம்பவத்தை தொடர்ந்து கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கலிபோர்னியா மாகாணத்தில் 14 இடங்களில் எரியும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 70 ஆயிரம் ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2017-10-11