காஷ்மீர், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் உறைபனி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரியில் உள்ள முகுல் நெடுஞ்சாலை, உறைபனியால் மூடப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேபோல், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகள், வீடுகளின் கூரைகள் அனைத்தும் பனிப்போர்வை மூடிக் காணப்படுகிறது. இதனால், கடும் குளிர் நிலவுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *