மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், கஜா புயல் பாதித்த பகுதிகளில், மக்களின் நிலை இன்னும் மோசமாக இருப்பதாக தெரிவித்தார்.