ஆயிரம் ரூபாய் பணத்துக்காக மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நியாய விலைக்கடையில் கொடுத்த ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை தராத மனைவியை வெட்டிக் கொன்ற கணவர், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

உசிலம்பட்டி அருகே எழுமலையைச் சேர்ந்த ராசாத்தி, ரேசன் கடையில் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை வாங்கியுள்ளார்.

ராசாத்திக்கு ஏற்கெனவே கடன் கொடுத்தவர், ஆயிரம் ரூபாயை வாங்கிச் சென்றுவிட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகையை கேட்டு, மனைவி ராசாத்தியுடன் கணவர் ராமர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அரிவாளால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் ராமர், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து, ராசாத்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், ராமரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *