நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவையொட்டி பழைமை வாய்ந்த நாணயங்களின் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியில் கி.மு 6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட தடமலா என்ற அரியவகை நாணயம், சோழர், பாண்டியர், மௌரியர்கள், குப்தர்கள், குஷாலர்கள் மற்றும் நாயக்கர்கள் கால நாணயங்கள், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நாணயங்கள், விக்டோரிய பேரரசி நாணயங்கள், அண்மையில் பயன்பாட்டில் இருந்து மறைந்துபோன 5 பைசா, 10பைசா நாணயங்கள், ஓட்டை காலணாக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நாணயங்கள் இடம்பெற்றிருந்தன.
இதேபோல் ரூபாய் நோட்டுகளும் இடம்பெற்றிருந்தன. இதனை ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.