காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்துத் திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் தங்கள் உடலை மணலில் புதைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை, பட்டை நாமம் அணிந்தபடி மண்டை ஓடுகள் எலும்புகளையும் வைத்திருந்த விவசாயிகள் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாகத் தெரிவித்தனர்.