மனஅழுத்தத்தால் போலீசார் தற்கொலை அதிகரிப்பு – நடிகர் கார்த்தி கவலை!

காவலர்கள் மனஅழுத்தத்துடன் பணியாற்றுவதால் தான் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், காவலர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், எனவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 

கோவையில், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் துவக்க விழா நடைபெற்றது.

இதில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி, கோவை மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா, நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், அறக்கட்டளைக்கு நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில், 10 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, காவலர்களின் மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை போக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினார்.

நேர்மையாக இருப்பதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளதாகவும், அவர் வேதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *