உலகில் அழிந்து வரும் உயிரினங்களை காக்க வேண்டியது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரான்சில் மின்விளக்குகளைக் கொண்டு பல்வேறு உயிரினங்களின் வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உலக வன உயிரின பாதுகாப்பு அமைப்பு பாரிஸ் நகரில் உள்ள தாவரவியல் பூங்காவில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஒரு சுறா மீனின் வாயில் நுழைந்து செல்வது போன்ற வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, போலார் கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான கரடிகள், தவளைகள், ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், நீண்டு நெளியும் பாம்புகள், யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள் என ஒரு மிருகக்காட்சி சாலையே வண்ண விளக்குகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது.
இவை தவிர முன்னொரு காலத்தில் வாழ்ந்த டைனோசர்களும் மின்விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.