ரஷ்யாவில் நகர்ப்புற பகுதிக்குள் 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நோவாயா ஸெம்லியா என்ற இடம் ஆர்டிக் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இருந்து பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் பனிக்கரடிகள் வசித்து வந்தன. தற்போது அங்கு அதிக பனி காரணமாக சீல்களும், மீன்களும் இடம் மாறிச் சென்று விட, வேறு வழியின்றி தவித்த பனிக்கரடிகள் உணவுத் தேடலுக்காக ஸெம்லியா நகருக்குள் புகுந்தன.
தற்போது வரை 50க்கும் மேற்பட்ட கரடிகள் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறியுள்ள நகர நிர்வாகம், அவசர நிலையை பிறப்பித்துள்ளது. தொடர்ந்து கரடிகளை விரட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.