ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்கள் – எம்.எச்.ஜவாஹிருல்லா

ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்களை அனைவருக்கும்தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைத்தூதர் இப்ராஹீம் (அபிரகாம்) மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல்(இஸ்மவேல்) ஆகியோரின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் உலகமெங்கும் கொண்டாடப் படுகின்றது.

தியாகத் திருநாள்அல்லது ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் தருணத்தில் உலகமெங்கிலிருந்தும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புனித மக்காவல் ஒன்றுகூடி ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.

பல நிறத்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகளை பேசினாலும், பல்வேறு கலாச்சார வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் வெள்ளை ஆடையை உடுத்திநிறைவேற்றும் கடமைகள் சகோதரத்துவம் நிலைநாட்டப்படுவதற்கு அத்தாட்சியாக அமைந்துள்ளன.

சகோதரத்துவம், ஓற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும்,பிறர் இன்பத்தில் மகிழுறும் மனநிலை ஏற்படவும் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக.

நமது நாட்டு மக்களிடையேயும் சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக. கேரளா மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் நீங்கவும் பிரார்த்திப்போமாக. துயருற்று நிற்கும் அம்மக்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முன் வருவோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *