முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி இராதகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். அன்றைய சென்னை மாகாணத்தை சார்ந்தவர் என்பது பெருமைக்குரியது.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார்கள் என்பதை விடவும் அடுத்தடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தையும் அதன்மூலம் ஒரு தேசத்தின் எதிர்காலத்தையும் வடிவமைக்கிறார்கள் என்பதே சரியாகும். ஆசிரியர்கள் படைப்பாளிகளை உருவாக்கும் படைப்பாளிகள் ஆவர். நல்ல குடும்ப தலைவர்களை, சிறந்த விஞ்ஞானிகளை, சிறந்த கலைஞர்களை, சிறந்த எழுத்தாளர்களை, சிறந்த தலைவர்களை என பல்வேறு வகையிலான ஆற்றலாளர்களை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்தவர்களே ஆசிரியர் பெருமக்களாவர். அந்த வகையில் ஆசிரியர் பணி என்பது மற்றபிற பணிகளைவிடவும் புனிதமானது.
இத்தகைய புனிதமான பணியினை ஆற்றும் ஆசிரியர் பெருமக்களை போற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆசிரியர் நாளில் ஆசிரியர் பெருமக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.