நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள 6 அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டுள்ளார். 8 அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பில் கடந்த மாதம் 28-ஆம் தேதி குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்து.
இந்நிலையில் இன்று மருத்துவர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ, தர்மராஜ், பாலாஜி, சங்கர் ஆகியோரிடம் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்திவருகிறார்.
நாளை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக், டாக்டர் முரளிதரன், முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம்மோகன்ராவ், டாக்டர் எஸ். தினேஷ் ஆகியோரிடம் நாளை சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெறவுள்ளது.