ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் உற்பத்தியை மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்திய ஐபோன் எக்ஸ் எஸ், மற்றும் ஐபோன் எக்ஸ் எஸ் மேக்ஸ் ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை என கூறப்படுகிறது.
அதேபோல், அண்மையில் வெளியிட்ட பல ஐபோன்களும் கடும் விற்பனை சரிவை சந்தித்துள்ளதால், அவற்றின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், புதிய ஐபோன் ரகங்களை வெளியிடுவதையும் தற்காலிகமாக நிறுத்த திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற ஐபோன் எக்ஸ் ரக ஸ்மார்ட்போனை மீண்டும் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.