பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காததற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு ராஜீவ் கொலைக்குற்றவாளிகளில் ஒருவரான நளினி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு கடிதப் பரிவர்த்தனை மூலம் பேட்டியளித்துள்ள நளினி, மத்திய அரசு தங்களது விடுதலை விவகாரத்தில் கருணை காட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். விடுதலைக்குப் பின்னர் கணவரும் தாமும் மகளுடன் சேர்ந்து அமைதியாக வாழ விரும்புவதாக நளினி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி தங்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நளினி, 27 ஆண்டுகால சிறை வாழ்க்கையின் போது அடைந்த வலிகள் அனைத்தையும் மறக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.