டெல்லியில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு டெல்லியின் அசோக் விகார் என்ற இடத்தில் இருந்த குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் இதுவரை 4 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேரின் உல்களை மீட்டுள்ளனர். மேலும் 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.