சுகாதாரத்துறையும் உள்ளாட்சித்துறையும் இணைந்து முழுமையான கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாகக் கூறினார்.