மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2க்கு 0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி நேற்று முன்தினம் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாளான நேற்று வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால்
367 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட் ஆகினர்.
உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சில் அந்த அணியின் விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்தன. இறுதியில் 127 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சுருண்டது.
இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.
பிரித்வி ஷா, கே.எல்.ராகுல் தலா 33 ரன்கள் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்ற இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.