2019ஆம் ஆண்டுக்கான எச்1பி விசாவின் அதிகபட்ச அளவு எட்டப்பட்டுவிட்டதாக, அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கு, ஆண்டுக்கு 65 ஆயிரம் ஹெச்1பி விசாக்களுக்கு அனுமதி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை எச்1பி விசாவுக்கு விண்ணப்பம் வாங்கும் பணி தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட 65 ஆயிரம் விசாக்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுவிட்டதாகவும், அதில் முதுகலைப் பட்டம் பயின்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் 20 ஆயிரம் விசாக்களுக்கு குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் என்றும் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.