இடைத்தேர்தல் நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் வாகனங்களுக்கு இன்று அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரத்து, 200 இருசக்கர வாகனங்களும், 5 ஆயிரத்து 70 கார்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு இன்று அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதனிடையே குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 196 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் 320 ஒப்புகைச் சீட்டுகள் பயன்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *