தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகையை வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 985 கோடி ரூபாயை இரண்டு மாதங்களில் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் உயர்கல்வி கனவு நிறைவேறாமல் பாதிக்கப்படும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தனியார் சுயநிதி கல்லூரிகளில் சேர்ந்து படிக்க ஏதுவாக மத்திய அரசின் பங்களிப்பு நிதி உதவியின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 2012ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

இதில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 1765 கோடி ரூபாயும், பழங்குடியின மாணவர்களுக்கு 31 கோடி ரூபாயும் மத்திய அரசு வழங்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அசோக்குமார் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *