உலக அழகியாக மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டிலியான் தேர்வு

உலக அழகியாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வனசா பொன்ஸ் டிலியான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 118 இளம்பெண்கள் போட்டியிட்டனர். இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த மாணவி அனுகீர்த்தியும் இப்போட்டியில் பங்கேற்றார்.

சீனாவின் சன்யா நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனசா பொன்ஸ் டிலியான் 68வது உலக அழகியாக அறிவிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த மானுசி சில்லார்,  வனசாவுக்கு கீரிடம் அணிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *