நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி மும்பையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய பிரசிடென்ட் லெவன் அணியை சந்தித்தது. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து விளையாடிய இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. பின்னர் 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 265 ரன்னில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *