2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கயுள்ளது. மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டிகள், மே மாதம் 27 ஆம் தேதிவரை நடைபெறுகின்றன. சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், 2 ஆண்டுகள் தடை காலத்திற்கு பிறகு மீண்டும் களமிறங்க உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
2018-04-07