தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால், தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.