29ந் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் பரவலாக மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 29ஆம் தேதி பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை நிலவரம் தொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் நாட்களில் அந்தமான் – நிக்கோபர் தீவுகளில் மழை பெய்யும் என்றும், வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

அதே காலகட்டத்தில் கேரளா, லட்சத்தீவு பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *