இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர், அக்டோபரில் 4 முறை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 16 லட்சத்து 21 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், புதிதாக பெயர் சேர்க்க 11 லட்சத்து 91 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயரை நீக்க ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேரும், திருத்தம் மேற்கொள்ள ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முகவரி மாற்றம் செய்யக் கேட்டு 1 லட்சத்து 13 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இனி பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர் இம்மாத இறுதிக்குள் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது