மேட்டூர் அணையில் நொடிக்கு 16,500கனஅடிநீர் திறப்பு, வெளியேறும் நீரில் 330மெகாவாட் மின் உற்பத்தி

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் 16ஆயிரத்து ஐந்நூறு கன அடியாக அதிகரித்ததையடுத்து அணை, சுரங்க நீர்த்தேக்க மின்நிலையங்களில் 330 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் தேக்கப்பட்டு நொடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டால் 460 மெகாவாட் மின்னுற்பத்தி செய்ய முடியும். அணையில் இருந்து பாசனத்துக்காகத் திறக்கப்படும் நீரின் அளவு பன்னிரண்டாயிரத்து ஐந்நூறு கன அடியிலிருந்து பதினாறாயிரத்து ஐந்நூறு கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்தத் தண்ணீரைக் கொண்டு அணை மின் நிலையத்தில் 40மெகாவாட், சுரங்க மின் நிலையத்தில் 120 மெகாவாட், நீர்த்தேக்க மின் நிலையங்களில் 170மெகாவாட் என மொத்தம் 330 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *