முழு கொள்ளளவை எட்டுகிறது வைகை அணை… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர் மட்டம் மீண்டும் 66 கன அடி நெருங்கியதால் இன்று மீண்டும் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் கனமழை பெய்த தால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. அணையின் மொத்த அளவான 71 அடியில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 66 புள்ளி 01அடியாக உயர்ந்தது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2ஆயிரத்து 510 கன அடியாக உள்ளது. இதனை அடுத்து வைகை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் கரையோரம் இருப்பவர்கள் பாதுகாக்க இருக்க வேண்டுமென்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *