பெத்லகேமில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் தொடக்க நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
ஏசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் பெத்லகேமில், டிசம்பர் மாதம் பிறந்ததும் கொண்டாட்டங்கள் களைகட்டி விடும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மாதம் முழுக்க கொண்டாட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.
இந்த ஆண்டு 54 அடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துஸ் மரம் கட்டமைக்கப்பட்டு, பல்வேறு கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
காரிருள் பிளக்கும் வாண வேடிக்கையுடன் மிளிரும் கிறிஸ்துமஸ் மரத்தை ஆயிரக்கணக்கானோர் பழமையான தேவாலயத்தின் முன் திரண்டு கண்டு ரசித்தனர்.