புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.கவின் பங்கு நிச்சயமாக இருக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்

புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.கவின் பங்கு நிச்சயமாக இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 160வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
அ.தி.மு.க யானை பலத்துடன் கூடிய கூட்டணியை அமைக்கும் என்றார். புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.கவின் பங்கு நிச்சயமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து கமல் விமர்சித்திருப்பது சரியானது தான் என்று ஜெயக்குமார் கூறினார். மேலும் கமலுக்கு அ.தி.மு.க கூட்டணியில் இடம் அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், அரசியலில் எதுவும் நடக்கலாம் என கூறினார். மேலும் தி.மு.க., அ.ம.மு.க மட்டுமே அரசியலில் அ.தி.மு.கவிற்கு எதிரி என்றும் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *