பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தற்கொலை

விழுப்புரம் அருகே, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில், காதலியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னியூர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் சென்னையில் மருத்துவப் படிப்பு படித்து வந்தார். இவருக்கும் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு பிரிவில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று சரஸ்வதிக்கு பிறந்த நாள் என்பதால், அதனைக் கொண்டாட கார்த்திகேயன் அன்னியூருக்கு சென்றுள்ளார். நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய போது  இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், தனது துப்பாக்கியால் சரஸ்வதியை 2 முறை சுட்டு விட்டு அவரும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *