அஸ்ஸாம்-அருணாசல மாநிலங்களை இணைக்கும் மிகப் பெரிய சாலை-ரயில் போக்குவரத்து பாலத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். நாட்டின் ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் அஸ்ஸாம் மாநிலம் தில்புருகர் -அருணாசலம் மாநிலம் இட்னா நகரை இணைக்கக் கூடிய போகி பீல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
பிரம்மபுத்திரா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தால், டெல்லியில் இருந்து அஸ்ஸாமுக்கு பயண நேரத்தில் நான்கு மணி நேரம் குறையும். 20 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பிரதமர் இன்று திறந்து வைக்க உள்ளார். இந்திய-சீன எல்லை வரை பீரங்கிகள், ராணுவப் படையினர் மற்றும் தளவாடங்களை ஏற்றிச் செல்லவும் இந்த பாலம் பயன்படும்.