பிரதமர் மக்கள்நலத் திட்டத்தில் 2.32இலட்சம் பேர் பயன்

பிரதமர் மக்கள்நலத் திட்டத்தின்கீழ் பயனாளிகளில் 68 விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பிரதமர் மக்கள்நலத் திட்டம் என்னும் பெயரில் ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் 23ஆம் நாள் தொடங்கியது. இந்தத் திட்டத்தால் இரண்டுமாதக் காலத்துக்குள் 2இலட்சத்து 32ஆயிரத்து 592பேர் பயனடைந்துள்ளதாகத் தேசிய நலவாழ்வு முகமையின் புள்ளி விவரத்தில் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் 68விழுக்காட்டினர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அந்தப் புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது. குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலானோர் பயனடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *