மகாகவி பாரதியார் மொழியையும் நாட்டையும் தன் இரு கண்களைப் போல் பார்த்தவர் எனத் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 137ஆவது பிறந்தநாளையொட்டிச் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்துக்குத் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பாரதியார் மொழியையும் நாட்டையும் தன் இரு கண்களைப் போல் பார்த்தவர் எனத் தெரிவித்தார்.