தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பதினொராம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட இந்த தேர்வு கடந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது.
இன்று தொடங்கும் பிளஸ் ஒன் தேர்வு வருகிற 22ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். ஏற்கனவே தேர்ச்சி பெறாத 84 ஆயிரம் பேர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை ஆய்வு செய்ய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.