நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும், புதுக்கோட்டையிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி நாகை வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் திங்களன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

மேலும் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, அந்தந்த பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பினைப் பொருத்து, பள்ளித் தலைமையாசிரியர்கள்
விடுமுறை அளிக்கும் முடிவினை எடுத்துக் கொள்ளலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாலும், பல இடங்களில், போக்குவரத்து, மின்வசதியில்லாததாலும், பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *