தென் தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலவுவதால், கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.