தமிழகத்தில் திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார்? எனப் பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வார நாட்களில் 4 காட்சிகளும்,விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை மீறி விடுமுறை நாட்களில் 6 காட்சிகள் வரை திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரித் தேவராஜன் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விடுமுறை நாட்களில் 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கவில்லை என்பதற்கு என்ன சான்றுள்ளது என மனுதாரரிடம் நீதிபதிகள் கேட்டனர்.
தொடர்புடைய அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். முறையான சான்றுகள் இல்லாமல் மனு தாக்கல் செய்ததற்தாக மனுதாரருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் எனத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.