டிச.5ஆம் தேதி அதிகாலை ஜெயலலிதா சுயமாக மூச்சு விட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் ஐந்தாம் தேதி அதிகாலை சுயமாக மூச்சு விட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்போலோ மருத்துவமனையின் இதயம் மற்றும் மயக்கவியல் நிபுணர் மீனல் வோரா உள்ளிட்ட 3 பேர் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகினர். அவர்களிடம் ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். சசிகலா தரப்பு வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரவிந்தன், ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவிகள் பொருத்தப்பட்ட பின்னர் டிசம்பர் ஐந்தாம் தேதி அதிகாலை, அவர் கண் அசைவையும், மூச்சு விட்டதையும் பார்த்ததாக மருத்துவர் மீனல் வோரா தெரிவித்ததாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *