ஜனவரி 14ந் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, வருகிற 14ஆம் தேதியும் விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையில், வருகிற 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் திருநாளை கொண்டாட ஏதுவாக, வருகிற 14ஆம் தேதி திங்கட்கிழமையும், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், பிப்ரவரி 9ஆம் தேதி சனிக்கிழமையன்று, பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *