சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்து இருந்தார்.

இதன்படி தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.இன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகை கோயம்பேடு பேருந்து நிலைய முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *