சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை… காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இன்று அதிகாலையில், கடலூர் சிதம்பரத்தில் கனமழை பெய்தது.

இதனிடையே, இலங்கை மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், தென்தமிழகம், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *