சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் அல்சாதுடனான சந்திப்பு பயனளிக்கத்தக்க வகையில் இருந்தது – பிரதமர் மோடி

சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் அல்சாதுடனான சந்திப்பு பயனுள்ள வகையில் இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு சவூதி பட்டத்து இளவரசரை சந்திதுப் பேசினார்.  இருநாடுகளுக்கிடையேயான பொருளாதார, கலாச்சார மற்றும் எரிசக்தித் துறை உறவுகள் மற்றும் முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

இந்நிலையில் சவூதி பட்டத்து இளவரசருடனான சந்திப்பு பலனளிக்கத் தக்க வகையில் இருந்ததாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *