கொடைக்கானல் அருகே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

சேலத்தைச் சேர்ந்த கார்த்தி, செளந்தர், ரவி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர், கொடைக்கானல் அருகேயுள்ள சின்னப்பள்ளம் பகுதியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தனர். கஜா புயல் காரணமாக அப்பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், தொழிலாளர்கள் நால்வரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலையில் திடீரென அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி கார்த்தி, செளந்தர் உள்ளிட்ட நால்வரும் மண்ணில் புதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *