கிருஷ்ணா நதிநீர் தேக்கம் குறித்து கைசரக்காக தாம் எதையும் தெரிவிக்கவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய துரைமுருகன், இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் தலைவர் அறிக்கையின்படியே தாம் பேசியதாகக் கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் தம்மிடம் கேட்பதற்கு பதில் கணக்காய அலுவலகத்தில் கேட்கலாம் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சிக் காலத்தில் டெங்கும் இல்லை, டொங்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.