கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு, வினாடிக்கு 27 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
அதே நேரத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரியிலும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 27,000 கன அடியாக உள்ளது. ஐந்தருவி மற்றும் பிரதான அருவியில் அதிகளவு தண்ணீர், வெண்நுரை பொங்க ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.