இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் 50 பொருட்களுக்கு சுங்க வரி விலக்கை ரத்து செய்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வளரும் நாடுகள் அமெரிக்காவுக்கு வரி இன்றி பொருளை ஏற்றுமதி செய்வதால் பெருத்த லாபம் அடைவதாகவும், தாயக மக்கள் நஷ்டமடைவதாகவும் கூறி வரி விலக்கு கொள்கையை மாற்றி அமைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இதன் படி வியாழக்கிழமை முதல் 90 பொருட்களை வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கி அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மாங்காய், கைத்தறியில் உருவான கம்பளம், நெசவுக்கான நூல், உப்பு, ஹார்மோனியம் உள்ளிட்ட 50 பொருட்களும் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.
5.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா வரி விலக்கு பெற்று ஏற்றுமதி செய்து வந்தது.இந்நிலையில் டிரம்பின் புதிய அறிவிப்பால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி சரியும் சூழல் உருவாகி உள்ளது.